புதுதில்லி

முண்ட்கா: தொழிற்சாலையில் தீ விபத்து

DIN

மேற்கு தில்லி, முண்ட்காவில் உள்ள ஸ்வரான் பார்க்கில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி கூறியதாவது: 
முண்டா ஸ்வரான் பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை இரவு 11.35 மணி அளவில் தகவல் கிடைத்தது. உடனடியாக 20 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் பல மணி நேர போராட்டதுக்குப் பிறகு தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மற்றொரு விபத்து: கோவிந்த்புரியில் கடை ஒன்றில் லேசான தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT