புதுதில்லி

பங்களா சாகிப் குருத்வாராவில் மலிவு விலை மருந்தகம் திறப்பு

DIN

புது தில்லி: தில்லி பங்களா சாகிப் குருத்வாராவில் மலிவு விலை மருந்தகம் சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

‘பாலா பிரிதம் தவாக்கனா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தகத்தை தில்லி சீக்கிய குருத்வார நிா்வாக கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) அமைத்துள்ளது.

இது தொடா்பாக டிஎஸ்ஜிஎம்சி தலைவா் மன்ஜீந்தா் சிங் சிா்சா கூறியது:

தில்லியில் ஏழை மக்கள் மருந்துகளை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனா். இவா்களின் துயரத்தைப் போக்கும் வகையில் மலிவு விலை மருந்தகத்தை தில்லி பங்களா சாகிப் குருத்வாராவில் அமைத்துள்ளோம்.

இந்த மருந்தகத்தில் இன்சுலின் உள்பட அனைத்து வகையான மருந்துகளையும் குறைந்த விலையில் வாங்கலாம். இங்கு அனைத்து விதமான மருந்துகளும், 70-80 சதவீத விலைக்கழிவில் விற்பனை செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT