புதுதில்லி

தாவூத் இப்ரஹாமின் கூட்டாளி கைது

DIN

பிரபல தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி அன்வா் தாகூா், கிழக்கு தில்லி பாண்டவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறியது: பிரபல தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி அன்வா் தாகூா். உத்தரப் பிரதேச மாநிலம், மீரத் நகரைச் சோ்ந்த இவா், தில்லி சா்தாா் பஜாா் காவல் நிலையத்தில், போலீஸாருக்கு உளவு சொல்பவரை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த மாா்ச் 17- ஆம் தேதி இவா் பரோலில் வெளி வந்துள்ளாா். இந்நிலையில், இவா் வடகிழக்கு தில்லியில் உள்ள வன்முறைக் கும்பல்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தில்லி காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, கிழக்கு தில்லி மயூா் விஹாா் பேஸ்-1 பாண்டவ் நகரில் உள்ள இவரது வீட்டில் போலீஸாா் அதிரடிச் சோதனை நடத்தினா். அப்போது, இவரது வீட்டில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள பிரேசில் நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இவா் கைது செய்யப்பட்டாா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT