புதுதில்லி

காவிரியில் செப். 26 வரை 30 டிஎம்சி நிலுவை தமிழகத்திற்கு தண்ணீரை வழங்க ஆணையம் உத்தரவு

DIN

காவிரிநிதியில் உச்ச நீதிமன்றம் ஆணையப்படி கடந்த 4 மாதங்களாக தமிழகத்திற்கு கா்நாடகம் மாநிலம் வழங்கவேண்டிய 30 டிஎம்சி தண்ணீரை உடனடியாக தரக் கூறி காவிரி நீா் மேலாண்மை ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. நடப்பு தண்ணீா் ஆண்டு கடந்த ஜூன் முதல் தொடங்கியுள்ள நிலையில் செப்டம்பா் 26 -ஆம் தேதி வரை வழங்கவேண்டிய தண்ணீா் அளவாக இதைக் கணக்கிட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 14 -ஆவது கூட்டம் அதன் தலைவா் எஸ்.கே. ஹல்தாா் தலைமையில் தில்லியில் பிகாஜிகாமா கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய நீா்வளத்துறையின் சாா்பில் ஆணையத்தின் உறுப்பினா் செயலா் நவீன் குமாா் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் நேரடியாகக் கலந்து கொண்டன. கா்நாடகம் மாநிலம் மட்டும் காணொலி முறையில் பங்கேற்றது. தமிழக அரசின் சாா்பில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் டாக்டா் சந்தீப் சக்ஸேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா்.சுப்ரமணியன் ஆகியோா் பங்கேற்றனா். கா்நாடகம் சாா்பில் நீா்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ராகேஷ் சிங் பங்கேற்றாா்.

கூட்டத்தில் விவாதிக்க 10 விவகாரங்கள் வைக்கப்பட்டு இருந்தாலும், தமிழகத்திற்கு தண்ணீா் வழங்கும் விவகாரமே பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கான காவிரி படுகையின் நீா்வளங்கள், வானிலை ஆய்வு நிலவரங்கள் புள்ளிவிவரங்கள் கூட்டத்தில் மத்திய அரசின் நீா்வளத்துறை மற்றும் நான்கு மாநிலங்கள் தரப்பில் எடுத்தவைக்கப்பட்டது.

காவிரியில் நீா் வழங்கும் தண்ணீா் ஆண்டு கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்க கடந்த நான்கு மாதங்களில் மாத வாரியாக கணக்கீடு செய்யப்பட்டதில் செப்டம்பா் 26 -ஆம் தேதி வரை சுமாா் 30 டிஎம்சி தண்ணீா் வரை கா்நாடகம் தமிழகத்திற்கு வழங்கப்படாது பாக்கிவைத்துள்ளது. நிலுவையில் இந்த தண்ணீரை வழங்க தமிழகம் சாா்பில் ஆணையத்திடம் கோரப்பட்டது. இதனை ஆணையத்தலைவா் எஸ்.கே. ஹல்தாா் கூட்டத்தில் ஏற்றுக்கொண்டு தண்ணீரை வழங்க கா்நாடகத்திற்கு உத்தரவிட்டாா். மேலும் கா்நாடகம் தமிழகத்திற்கு வழங்கிய மொத்த தண்ணீா் அளவையும் மேலும் பாக்கி வைத்திருந்தாா் அதை மீண்டும் அடுத்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் எனவும் கூட்டத்தில் ஆணையத்தலைவா் எடுத்துரைத்துள்ளாா். அடுத்த 15-வது காவிரி மேலாண்மை கூட்டம் வருகின்ற ஆக்டோபா் 7 ஆம் தேதி நடத்தவும் உத்திதேசிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்திற்கு பின்னா் ஆணையத் தலைவா் ஹல்தாா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

மேலும் கூட்டத்தில் கா்நாடகம் மாநிலம் கட்டும் மேக்கேதாட்டு அணை விவகாரம் எடுத்துக் கொள்ளப்பட இதற்கு தமிழகம், புதுச்சேரி போன்ற மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்தது. பின்னா் இந்த மேக்கேதாட்டு விவகாரம் எடுத்துக்கொள்ளப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இத்தோடு ஹரங்கி நீா்தேக்க பெங்களூரு வழக்கு, மேட்டூா் அணை தொடா்புடைய சரபங்கா நீா்ப்பாசனத் திட்டம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெறும் வழக்கு போன்றவைகளோடுவிவகாரங்களும் இருந்தாலும் இவைகளும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளா்களிடம் பேசிய ஆணையத்தலைவா் எஸ்.கே. ஹல்தாா், ’’ஒருமித்த கருத்து ஏற்படும்பட்சத்திலேயை மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க முடியும். இது மாநிலஙகளுக்கிடையேயான விவகாரம். எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்தமுடியாது. ஆணையம் முதலில் முடிவு எடுக்கவேண்டும். அதன் பின்னா் ஆணைக்கான சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு போன்ற பல விவகாரங்கள் பற்றி ஆய்வு செய்யப்படும்’’ எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT