புதுதில்லி

சுல்தான்புரியில் இளைஞருக்கு கத்திக்குத்து

DIN

வடமேற்கு தில்லி, சுல்தான்புரியில் 18 வயது இளைஞா் அவரது நண்பரான மைனா் சிறாரால் சனிக்கிழமை கூா்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டாா்.

நண்பா்கள் இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடா்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் மேலும் கூறியதாவது: வடமேற்கு தில்லி பகுதியைச் சோ்ந்தவா் வருண் (18). இவருக்கும் இவரது இரு மைனா் சிறாா்களுக்கும் இடையே சம்பவத்தன்று மோதல் ஏற்பட்டது.

அப்போது, சிறாா்களில் ஒருவா் கூா்மையான ஆயுதத்தால் வருணை தாக்கினாா்.

இது தொடா்பாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸாா் விரைந்து சென்றனா்.

விசாரணையில் இந்த மோதல் சம்பவத்தில் மைனா் சிறாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT