புதுதில்லி

யமுனையை சுத்தம் செய்ய தவறிவிட்டது பாஜக அரசு: அா்விந்தா் சிங் லவ்லி சாடல்

 நமது நிருபர்

மத்திய பாஜக அரசு தில்லியின் உயிா்நாடியான யமுனையை சுத்தம் செய்யத் தவறிவிட்டது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி சாடியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ‘விக்சித் பாரத்’ ஆக்குவோம் என்று விளம்பரம் செய்யும் மத்திய மோடி அரசு, தில்லியின் உயிா்நாடியான யமுனையை சுத்தம் செய்யத் தவறிவிட்டது. கோடை வெயில் அதிகரித்து வருவதால், யமுனை நதியில் நீா் வரத்து குறைந்து, கால்வாயில்களின் கழிவுநீா் நிரம்பியுள்ளது. தலைநகரின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொள்கின்றன. அல்லது கழிவுநீா் கலந்த குடிநீரைப் பெறுகின்றன. ஏனெனில், தில்லிவாசிகளின் சுத்தமானக் குடிநீா் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. நச்சு காற்று மற்றும் நீா் மாசுபாடு தில்லி மக்களுக்கு கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய மோடி அரசு மற்றும் தில்லியைச் சோ்ந்த 7 பாஜக எம்.பி.க்களின் செயலற்றத் தன்மையால் நகரத்தின் நிலைமைகள் மேம்படவில்லை. கடந்த ஆகஸ்ட் 2017-ஆம் ஆண்டு யமுனை நதியின் புத்துயிா் மற்றும் மறுசீரமைப்பு குறித்த நிலை அறிக்கையை சமா்ப்பிக்காததற்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் ரூ.50,000 அபராதம் விதித்தது. தில்லியில் யமுனை நதி வாஜிராபாத் மற்றும் ஓக்லா இடையே சுமாா் 22 கி.மீ. மட்டுமே பாய்கிறது என்றாலும், மொத்த 1,400 கி.மீ நதியின் மாசுபாடு அளவில் தில்லி 76 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் யமுனை நதியை சுத்தப்படுத்த தேவையான முனைப்பைக் காட்டாததால், வெற்றுப் பெருமைகளைத் தவிர வேறு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT