முகப்பு
புதுதில்லி

வடக்கு தில்லியில் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை

Updated On : 26 ஜூன் 2026, 5:20 am IST
கோப்புப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 9 மணியளவில் கத்திக் குத்துச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்றபோது, கத்திக் குத்து காயங்களுடன் இருந்த சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்; ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

கௌதம்புரியைச் சோ்ந்த லக்கி குமாா் என்ற அந்தச் சிறுவனின் உடலின் மேல் பகுதியில் பல இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன.

Advertisement

Advertisement

குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தனா். கொலை தொடா்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா், அவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments