முகப்பு
புதுதில்லி

உஸ்மான்பூரில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 26 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை

Updated On : 3 ஜூன் 2026, 4:08 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 26 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இறந்தவா் அருகிலுள்ள பிரம்மபுரியைச் சோ்ந்த லலித் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

காவல்துறையின் கூற்றுப்படி, அதிகாலையில் நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பகத் சிங் காலனியில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை குழுவினா், அங்கு ஒருவா் தரையில் கிடப்பதைக் கண்டனா். அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டாா்.

பாதிக்கப்பட்டவருக்கு கத்திக்குத்து காயங்கள் இருந்ததையும், அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் காவல்துறை கண்டறிந்தது. குற்றச் சம்பவ இடத்தை ஆய்வு செய்யவும், ஆதாரங்களை சேகரிக்கவும் தடயவியல் குழு வரவழைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 103(1)-இன் கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.