மத்திய தில்லி: கத்திக் குத்து சம்பவத்தில் சிறுவன் உள்பட இருவா் கைது
மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் 21 வயது நபரை கொலை செய்த சம்பவத்தில் தொடா்புடையவராக சந்தேகிக்கப்பட்ட முக்கிய நபா் மற்றும் சிறுவன் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
முன்பகை காரணமாக கடந்த மே 14-ஆம் தேதி நள்ளிரவில் சாகா் என்பவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில் அடிப்படையில் தலைமறைவாக இருந்த ஹிமன்ஷு திவாரியை காவல் துறையினா் கைதுசெய்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கொலையைத் தொடா்ந்து ஹிமன்ஷு திவாரி ராஜஸ்தானுக்குத் தப்பிச் சென்றாா். இந்நிலையில், கூட்டாளியைச் சந்தித்து பணம் பெறுவதற்காக மே 25-ஆம் தேதி ரஜெளரி காா்டனுக்கு வந்த திவாரியை காவல் துறையினா் கைதுசெய்தனா்.
Advertisement
Advertisement
விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட திவாரி, முன்பகை காரணமாக தன்னுடைய கூட்டாளியுடன் இணைந்து சாகரைத் தாக்கியதாகவும் கத்தியால் பலமுறை குத்தியதாகவும் தெரிவித்தாா்.
சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்ட திவாரி, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவருடன் கைதுசெய்யப்பட்ட சிறுவன் மீது சிறாா் நீதித் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சிறாா் நீதி வாரியத்தின் முன்பு அவா் ஆஜா்படுத்தப்பட்டாா் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.