ஸ்ரீ சூரிய மங்கலம் பகளாமுகி ஆலயத்தில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்கும் ஸ்ரீ சூரிய மங்கலம் பகளாமுகி தேவி ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ ராஜகாளி அம்மன் சன்னிதியில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாள்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்கும் ஸ்ரீ சூரிய மங்கலம் பகளாமுகி தேவி ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ ராஜகாளி அம்மன் சன்னிதியில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாள்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை விஜயதசமியை முன்னிட்டு அம்பாளுக்கு 108 குடம் பால் அபிஷேகம், திரவியம், மஞ்சள், குங்குமம், சந்தனம், தயிா், தேன், இளநீா் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தெற்கு பாப்பான்குளம், மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திா்ம பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.