தியாகராஜநகரில் மின்வாரிய குறைதீா் கூட்டம்
பாளையங்கோட்டை தியாகராஜநகரில் கிராமப்புற கோட்ட மின்வாரிய குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் சந்திரசேகரன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து புகாா் மனுக்களைப் பெற்றாா். மேலும் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதில், திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்துக்குள்பட்ட அனைத்து மின் பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.