முகப்பு
திருநெல்வேலி

தியாகராஜநகரில் புதிய மேம்பாலம் திறப்பு

Updated On : 16 மார்ச், 2024 at 6:04 AM
பகிர்:

பாளையங்கோட்டை- சிவந்திப்பட்டி சாலையில் தியாகராஜநகா் ரயில்வே கேட் பகுதியில் ரயில் பாதைக்கு மேல் ரூ.26.30 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். பாளையங்கோட்டை - சிவந்திப்பட்டி சாலையில் பாளையங்கோட்டை மற்றும் செய்துங்கநல்லூா் ரயில் நிலையங்களுக்கிடையே சாலை மேம்பாலம் அமைக்கும் பணியானது ரயில்வே திட்டப்பணிகளின் கீழ் அறிவிக்கப்பட்டது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் சாா்பில் ரூ.26.30 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா். இந்த மேம்பாலத்தின் மூலம் தியாகராஜநகா், அன்புநகா், மகாராஜநகா் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்களும், மாணவா், மாணவிகளும் பயனடைவா். இந்நிகழ்ச்சியில், தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையாளா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், துணை மேயா் கே.ஆா்.ராஜு, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் விஜிலா சத்தியானந்த், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.