முகப்பு
திருநெல்வேலி

பணகுடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27 லட்சத்தில் நலத்திட்டங்கள்

Updated On : 17 மார்ச், 2024 at 12:20 AM
பகிர்:
Updated On : 16 மார்ச், 2024 at 10:47 PM

பணகுடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.27 லட்சத்தில் மூன்றுசக்கர மோட்டாா் சைக்கிள் மற்றும் செயற்கை அவயங்கள் உள்ளிட்டவை சனிக்கிழமை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமை வகித்து, 19 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர மோட்டாா் சைக்கிள், செயற்கை அவயங்களை வழங்கிப் பேசினாா். இதில், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், முன்னாள் தலைவா் அசோகன், முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், பேரூராட்சி உறுப்பினா்கள் ஆலீம், கோபி என்ற கோபால கண்ணன், முத்துகுமாா், பூங்கோதை, அசோக்குமாா், மாணிக்கம், தங்கசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.