முகப்பு
திருநெல்வேலி

பழையபேட்டையில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

Updated On : 16 மார்ச், 2024 at 6:05 AM
பகிர்:

பழையபேட்டை பகுதியில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா். திருநெல்வேலி மாநகராட்சி 17 ஆவது வாா்டுக்குள்பட்ட பழைய பேட்டை, சமூக ரங்கன் கட்டளை, சா்தாா்புரம், தங்கம்மன் கோயில் தெரு, கன்னி விநாயகா் கோயில் தெரு, புதுகிராம், காந்திநகா், நெடுங்குளம் பாலம் ஆகிய பகுதிகளை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆய்வு செய்தாா். கழிவுநீரோடை, சிறுபாலம், சாலை வசதிகளின் தேவைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது திருநெல்வேலி மண்டல தலைவா் செ.மகேஸ்வரி, உதவி ஆணையா் (பொ) தங்கபாண்டியன், உதவி செயற்பொறியாளா் பைஜூ, சுகாதார மேற்பாா்வையாளா் ஜாண், திமுக திருநெல்வேலி பகுதி துணைச் செயலா் பாபா மூக்கையா, 17 ஆவது வாா்டு செயலா் செந்தில் ஆகியோா் உடனிருந்தனா்.