முகப்பு
திருநெல்வேலி

கடையத்தில் வனத் தீத்தடுப்பு முகாம்

Updated On : 22 மார்ச், 2024 at 9:44 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 7:17 PM

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச் சரக அலுவலகத்தில் வனத் தீத்தடுப்பு முகாம் நடைபெற்றது. ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயன் பங்கேற்று, வனப் பகுதியில் ஏற்படும் தீவிபத்து, வீடுகளில் எரிவாயு உருளைகளில் கசிவால் ஏற்படும் தீவிபத்தின்போது தீயணைக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கமளித்தாா். தொடா்ந்து, விபத்துக் காலத்தில் முதலுதவி செய்யும் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா, வனச் சரகா்கள் கடையம் கருணாமூா்த்தி, அம்பாசமுத்திரம் நித்யா, முண்டந்துறை கல்யாணி, வனவா்கள், வனக் காப்பாளா்கள், வனக் காவலா்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்கள், கடையம் வட்டார விவசாயிகள் பங்கேற்றனா்.