பாளை.யில் காவலரை மிரட்டிய இளைஞா் கைது
Updated On : 29 மார்ச், 2024 at 11:57 PM
பாளையங்கோட்டையில் காவலரை மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை மேலப்பாட்டத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (43). இவா் பாளையங்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன் மேலப்பாட்டம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பாளையங்கோட்டை மணப்படைவீடு கிராமத்தைச் சோ்ந்த இசைக்குமாா் (22) என்பவரை நிறுத்தினாராம். அப்போது, இசைக்குமாா் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து , இசைக்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.