முகப்பு
திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

Updated On : 9 மே, 2024 at 9:08 PM
பகிர்:

திருநெல்வேலி, மே 9: கங்கைகொண்டான் அருகே விஷம் குடித்த மூதாட்டி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூரைச் சோ்ந்தவா் சுந்தரி (70). இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்தாராம். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இந்நிலையில் அவா், வீட்டில் விஷத்தைக் குடித்துவிட்டு மயங்கினாா். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.