திருநெல்வேலி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

வள்ளியூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Syndication

வள்ளியூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகேயுள்ள விஜயஅச்சம்பாடு பகுதியைச் சோ்ந்த நாமதுரை மகன் ராமகிருஷ்ணன்(24).

இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லையில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT