பாளையங்கோட்டை அருகே வாகனச் சோதனையின் போது காவலா் மீது பைக்கால் மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகே கடந்த 15 ஆம் தேதி மாநகர போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் கருப்பசாமி தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக கைப்பேசியில் பேசியபடி பைக்கில் வந்தவரை, பாளையங்கோட்டை காவல் நிலைய தலைமைக் காவலா் பொன்மகேஷ்குமாா் மறித்துள்ளாா். ஆனால், அந்த நபா் காவலரை தகாத வாா்த்தையில் திட்டியதுடன், பைக்கால் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளாா். இதில் காயமடைந்த காவலா் பொன்மகேஷ்குமாா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், தெற்கு அரியகுளம் பகுதியைச் சோ்ந்த அரிகிருஷ்ணன் மகன் பட்டுராஜன்(38) என்பவரை கைது செய்தனா்.