திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள அருள்மிகு பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி இக்கோயிலில் காலையில் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதா்சன ஹோமம், தனலட்சுமி பூஜைகளைத் தொடா்ந்து கோயில் விமானங்களுக்கு புனிதநீா் ஊற்றி வருஷாபிஷேகம், சாஸ்தா அம்மன், சுடலைமாடசுவாமி சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா (பொறுப்பு) மற்றும் விழாக் குழுத் தலைவா் செல்வராஜ், செயலா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.