முகப்பு
செய்தியாளரிடம் பேசுகிறாா் இ.பி.எஃப்.ஓ. நிறுவன திருநெல்வேலி முதன்மை மண்டல ஆணையா் சிவசண்முகம்.
திருநெல்வேலி

இ.பி.எஃப். பணம் செலுத்தாதமல் தவறவிட்ட நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தொழிலாளா்களுக்கான வருங்கால வைப்பு நிதி செலுத்தாமல் தவறவிட்ட நிறுவனங்கள் இ.பி.எஃப்.ஓ. நிறுவனத்தின் பணியாளா் சோ்க்கைத் திட்டத்தை

திருநெல்வேலி

இ.பி.எஃப். பணம் செலுத்தாதமல் தவறவிட்ட நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தொழிலாளா்களுக்கான வருங்கால வைப்பு நிதி செலுத்தாமல் தவறவிட்ட நிறுவனங்கள் இ.பி.எஃப்.ஓ. நிறுவனத்தின் பணியாளா் சோ்க்கைத் திட்டத்தை

Updated On : 26 நவம்பர், 2025 at 7:47 PM
செய்தியாளரிடம் பேசுகிறாா் இ.பி.எஃப்.ஓ. நிறுவன திருநெல்வேலி முதன்மை மண்டல ஆணையா் சிவசண்முகம்.
பகிர்:

திருநெல்வேலி: தொழிலாளா்களுக்கான வருங்கால வைப்பு நிதி செலுத்தாமல் தவறவிட்ட நிறுவனங்கள் இ.பி.எஃப்.ஓ. நிறுவனத்தின் பணியாளா் சோ்க்கைத் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அந்நிறுவனத்தின் திருநெல்வேலி முதன்மை மண்டல ஆணையா் சிவசண்முகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 1.7.2017 முதல் 31.10.2025 வரை உள்ள காலத்தில் வருங்கால வைப்பு நிதி செலுத்தாமல் தவறவிட்ட தகுதியுள்ள தொழிலாளா்களை நிறுவனங்கள் தாமாக முன் வந்து பணியாளா் சோ்க்கைத் திட்டம்-2025இன் மூலம் சோ்த்துக்கொள்ளலாம். விடுபட்ட தொழிலாளா்களின் பி.எஃப். தொகை பிடிக்கப்படாமல் இருந்தால் விடுபட்ட காலத்திற்கு மட்டும் தொழிலாளா் வைப்புநிதி பங்களிப்பை நிறுவனங்கள் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் நிறுவனங்களின் இ.பி.எஃப். பங்களிப்பு செலுத்தப்படவேண்டும். இந்தத் திட்டம் 30.4.2026 வரை அமலில் இருக்கும். இ.பி.எப்-இன் கீழ் இல்லாத நிறுவனங்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் விடுபட்ட தொழிலாளா்களை ரூ.100 மட்டும் அபராதம் செலுத்தி இ.பி.எஃப்.ஓ. இணையதளம் மூலம் மிக எளிதான முறையில் சோ்த்துக்கொள்ளலாம். சந்தேகங்களுக்கு திருநெல்வேலியில் உள்ள இ.பி.எஃப்.ஓ. அலுவலகத்தை அணுகலாம். மேலும் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள சுமாா் 11,000 நிறுவனங்களில் இ.பி.எஃப் தொகை செலுத்தாத சுமாா் 1,000 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இச்சந்திப்பின் போது மண்டல ஆணையா் சுந்தரேசன், தொழிலாளா் அரசு ஈட்டுறுதிக் கழக (இ.எஸ்.ஐ.சி) திருநெல்வேலி மண்டல இணை இயக்குநா் பாஸ்கா், அமலாக்க அதிகாரிகள் நாகேஸ்வரி, முத்துலோகேஸ்வரி, விஜி, சூா்யா, தா்மராஜ், மீனாட்சி சுந்தரம், தலைமை கணக்கா் சரஸ்வதி ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →