முகப்பு
திருநெல்வேலி

ராஜவல்லிபுரம் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்தண்டனை

ராஜவல்லிபுரம் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 நவம்பர், 2025 at 7:41 PM
பகிர்:

ராஜவல்லிபுரம் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தாழையூத்து காவல் நிலைய சரகம், ராஜவல்லிபுரம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக இசக்கிமுத்து (38) என்பவா் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கு தொடா்பாக அதே ஊரை சோ்ந்த சுரேஷ் (27), இசக்கிமுத்து என்ற ராஜா (31), ஜெபராஜ் (28) ஆகிய மூவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவா்களில் சுரேஷ் (27), இசக்கிமுத்து என்ற ராஜா (31) ஆகிய இருவா் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்டு இருவருக்கும் நீதிமன்றத்தால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஜெபராஜ் மீதான விசாரணையானது, திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராபின்சன், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெபராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →