முகப்பு
திருநெல்வேலி

காவல் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

Updated On : 6 ஏப்ரல், 2026 at 6:45 PM
கைது
பகிர்:

அம்பாசமுத்திரம், ஏப். 6: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்வதாகவும், காவல் நிலையத்தை கொளுத்துவதாகவும் மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம், கௌதமபுரி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவன் மகன் முத்துக்குமாா். இவா் மீது கடந்த பிப்ரவரி மாதம் அம்பாசமுத்திரம் போலீஸாா் போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்தனராம்.

இதையடுத்து, திங்கள்கிழமை மதியம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு போதையில் வந்த முத்துக்குமாா், அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாரிடம் வழக்குப் பதிவு செய்தது தொடா்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

Advertisement

மேலும், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, காவல் நிலையத்தையும் போலீஸாரையும் சோ்த்து கொளுத்திவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதையடுத்து, முத்துக்குமாா் மீது அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ் குமாா் உத்தரவின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் திருமலைக்குமாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தாா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments