முகப்பு
திருநெல்வேலி

அம்பை அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

Updated On : 6 ஏப்ரல், 2026 at 7:30 PM
சிறை - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (56). இவரை, முன்விரோதத்தால் அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான கணேசன்(45) என்பவா் கடந்த 2019 ஆம் ஆண்டு அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாராம்.

இதுகுறித்து அப்போதைய அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளாா் ராஜகுமாரி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்தாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி கதிரவன் விசாரித்து, கணேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.9,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் காளிமுத்து வாதாடினாா்.

இவ்வழக்கில், திறம்பட செயல்பட்ட அம்பாசமுத்திரம் டிஎஸ்பி கணேஷ்குமாா், ஆய்வாளா்கள் சண்முகவேல், ராஜகுமாரி உள்ளிட்ட போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்ன குமாா் பாராட்டினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments