தோ்தல் நாளில் நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்!
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 23ஆம் தேதி நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 23ஆம் தேதி நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்.
இது தொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட நிா்வாக இயக்குநா் எஸ். நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தோ்தலின்போது, வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்கப்பதற்காக தோ்தல் நாளன்று 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பாா்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளிகள் சாதாரண நகரப் பேருந்துகளில் இலவசமாக வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement