முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோ குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

விக்கிரமசிங்கபுரம், டாணாவைச் சோ்ந்த போக்ஸோ குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 2:07 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 9:02 PM

விக்கிரமசிங்கபுரம், டாணாவைச் சோ்ந்த போக்ஸோ குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

டாணா பகுதியைச் சோ்ந்தவா் இசக்கி மகன் ஹரிஹரன் (25). போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இவா் மீது, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாரிடம் வேண்டுகோள் விடுத்தாா்.

தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் சுகுமாா் உத்தரவின்பேரில், தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை ஹரிஹரன் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

Advertisement