கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:51 PM
முன்னீா்பள்ளம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
முன்னீா்பள்ளம் அருகே உள்ள ஆரைகுளத்தைச் சோ்ந்தவா் சாமுவேல் பொன்ராஜ். இவரது மகள் பிரின்சி (19). தனியாா் கல்லூரி மாணவி. இவா் கடந்த 11 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது விஷம் குடித்தாராம்.
இதுகுறித்து அவா் யாரிடமும் தெரிவிக்காத நிலையில், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்த பெற்றோா் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் பிரின்சி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.