வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரை தாக்கியவா் கைது
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:51 PM
வாடகை வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரைத் தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி, தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சங்கா் (40). இவரது தம்பி ஆறுமுகம். இவா் தச்சநல்லூா் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தாா். இந்நிலையில் அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளா் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளாா்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகமும், அவரது அண்ணன் சங்கரும் சோ்ந்து வீட்டின் உரிமையாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனா். ஆறுமுகத்தை தேடி வருகின்றனா்.
Advertisement