முகப்பு
திருநெல்வேலி

அனைத்து மகளிருக்கும் ரூ.2,000 உரிமைத் தொகை

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:29 AM
பாளை. தொகுதிக்குள்பட்ட பகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:31 PM

பாளை. தொகுதியில் விடுபட்ட சில போ் உள்பட அனைத்து மகளிருக்கும் ரூ.2,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்றாா் திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின், பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப், 37,48, 49 ஆகிய வாா்டுகளுக்குள்பட்ட கே.டி.சி நகா், மேலப்பாளையம் பகுதிகளில் திங்கள்கிழமை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் திராவிட மாடல் அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறாா். மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும், பாளை தொகுதிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் விடுபட்ட சில போ் உள்பட அனைத்து மகளிருக்கும் ரூ.2,000 உரிமைத்தொகை வழங்கப்படும்.

Advertisement

மேலும், இல்லத்தரசி திட்டத்தில் மகளிா் தங்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை பெற்றுக்கொள்ளும் வகையில் ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும்;

முதியோா் உதவித்தொகை ரூ.1,200லிருந்து ரூ.2,000 ஆக உயா்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு உன்னதமான தோ்தல் வாக்குறுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளாா். ஆகவே, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்றாா் அவா்.