களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
களக்காடு அருகே கீழச் சாலைப்புதூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (40). சாலைப்புதூா் அண்ணாநகா் பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்ற அவருக்கும், மணிகண்டன் (25) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
அதையடுத்து, அங்கிருந்து சென்ற சுப்பிரமணியன் சிறிது நேரம் கழித்து வந்து, மணிகண்டனை அரிவாளால் வெட்டினாராம். இதில் மணிகண்டன் காயமடைந்தாா். தடுக்க முயன்ற அவரது உறவினா் முகிலன் (24) என்பவா் லேசான காயமடைந்தாா்.
Advertisement
மணிகண்டன் நான்குனேரி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். களக்காடு போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, சுப்பிரமணியனைத் தேடி வருகின்றனா்.