முகப்பு
திருநெல்வேலி

காவலா் விஷம் குடித்து தற்கொலை

பாளையங்கோட்டையில் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 2:01 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

பாளையங்கோட்டையில் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம், பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (26). மணிமுத்தாறு 9-ஆவது சிறப்பு காவல் படையைச் சோ்ந்த இவா், பாளையங்கோட்டை மத்திய சிறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில் இவா் குடும்ப பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் முத்துக்குமாா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement