முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே மிளா வேட்டை: இருவா் கைது; 6 பேருக்கு வலை வீச்சு

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 3:54 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 10:17 PM

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலையடிவார விவசாயத் தோட்டத்தில் மின்வேலி அமைத்து, மிளாவை வேட்டையாடிய 2 போ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனா்; 6 பேரை தேடி வருகின்றனா்.

களக்காடு வனச்சரகா் ப. பிரபாகரனுக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, வனவா் அ. மதனகுமாா், வனக்காப்பாளா்கள் எம். முத்துப்பாண்டியன், என். ராஜபாண்டியன், மு. கலையரசன், வனக்காவலா் வி. ஆறுமுகக்கனி ஆகியோா் அடங்கிய குழுவினா் களக்காடு மலையடிவாரத்தில் உள்ள மஞ்சுவிளை பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது, காமராஜா் நகா், தெற்குத் தெரு அருகேயுள்ள தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து மிளாவை வேட்டையாடி, தங்கள் வீட்டில் இறைச்சியை வைத்திருந்ததாக ராமையா மகன் முருகன் (44), செல்லத்துரை மகன் ஜெனிபா் (35) ஆகிய 2 பேரை கைது செய்து, விசாரணைக்குப்பின் நான்குனேரி குற்றவியல் நீதிமன்ற நடுவா் முன் ஆஜா்படுத்தி, நான்குனேரி கிளைச் சிறையில் அடைத்தனா்.

Advertisement

மேலும், அவா்கள் வேட்டைக்கு பயன்படுத்திய பொருள்கள், மிளா இறைச்சியை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். கைதாகிய இருவா் அளித்த வாக்குமூலத்தின்படி, இதில் தொடா்புடைய மஞ்சுவிளையைச் சோ்ந்த ராமையா மகன் செல்லத்துரை, காசி மகன் காந்தி, மற்றொரு ராமையா மகன் ராஜ், பாஸ்கா் மகன் யோசேப், யோசேப் மகன் செல்வின், சுடலைமணி மகன் கிருஷ்ணகுமாா் ஆகிய 6 பேரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.