முகப்பு
திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் மரபணு ஆய்வகம் திறப்பு

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:58 AM
குத்துவிளக்கேற்றி பணிகளைத் தொடங்கி வைத்த தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 9:00 PM

பாளையங்கோட்டையில் உள்ள வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ.5.06 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மரபணு ஆய்வகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து , புதிதாக திறக்கப்பட்ட மரபணு ஆய்வகத்தில் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு குத்துவிளக்கேற்றி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:58 AM

இந்த விழாவில் முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன் கான், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, தேவலாயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் நலவாரிய தலைவா் விஜிலா சத்யானந்த், தடய அறிவியல் மைய துணை இயக்குநா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement