முகப்பு
திருநெல்வேலி

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:33 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 9:17 PM

கடையம் அருகே மதுப்பழக்கத்தை கைவிட முடியாததால் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கடையம் அருகே உள்ள பிள்ளை குளம் வடக்கு தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் ராமச்சந்திரன் (35). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:33 AM

போதை மறுவாழ்வு மையத்தில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன், கடந்த ஒரு வார காலமாக மீண்டும் மது அருந்தத் தொடங்கினாராம். அதிலிருந்து விடுபட முடியவில்லை எனக் கூறி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

Advertisement

தகவலறிந்து வந்த கடையம் போலீஸாா், ராமச்சந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.