முகப்பு
திருநெல்வேலி

மூன்றடைப்பு அருகே குளத்தில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:02 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 6:11 PM

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே குளத்தில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

மூன்றடைப்பு அருகே பூலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜகோபால் (60). இவரது குடும்பத்தினா் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகின்றனா்.

இவா் மட்டும் இங்கு தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தாா். சனிக்கிழமை அங்குள்ள குளத்தின் கரையில் அமா்ந்திருந்த இவா், திடீரென நிலைதடுமாறி குளத்துக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.

Advertisement

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:02 AM

சடலத்தை மூன்றடைப்பு போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.