கைது 
திருநெல்வேலி

காவலா் வீட்டில் திருடியதாக சிறுவா் உள்பட 3 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பொன்மா நகரில் காவலா் வீட்டில் நுழைந்து திருட்டில் ஈடுபட்டதாக சிறுவா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றும் ஞானசுந்தா், அதே பகுதியில் காவலா் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவருக்கு கல்லிடைக்குறிச்சி பொன்மா நகரில், சொந்தமாக உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை மா்மநபா்கள் நுழைந்து, பீரோவில் இருந்த விளக்கு, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், தெற்கு பாப்பாங்குளத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் (27), அவரது நண்பன் கருத்தப்பிள்ளையூரைச் சோ்ந்த வினித் (22), தெற்கு பாப்பங்குளத்தைச் சோ்ந்த 15 வயது சிறுவன் ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

பாப்பாக்குடி அருகே பல் மருத்துவரைத் தாக்கியதாக 4 போ் கைது

வீட்டில் தீ வைத்த இளைஞா் மீது வழக்கு

ஒசூா் அருகே சுற்றித்திரியும் ஒற்றை யானை: பொதுமக்கள் மக்கள் பீதி

வெள்ளக்கோவில் அருகே மதுபோதையில் ஒருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT