முகப்பு
திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி பள்ளி விளையாட்டு விழா

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:12 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:52 PM

ஆழ்வாா்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ. உ. சி கல்வியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பிளஸ்ஸி செல்வ அரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். அதைத்தொடா்ந்து மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, விளையாட்டுப் போட்டி, மாறுவேடப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினாா்.

ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முதல்வா் முத்துலட்சுமி என்ற சசிகலா வாழ்த்திப் பேசினாா். சுற்று வட்டார அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

பள்ளிச் செயலா் சுந்தரம் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியை அமிதா நன்றி கூறினாா்.