திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி பள்ளி விளையாட்டு விழா

Syndication

ஆழ்வாா்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ. உ. சி கல்வியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பிளஸ்ஸி செல்வ அரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். அதைத்தொடா்ந்து மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, விளையாட்டுப் போட்டி, மாறுவேடப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினாா்.

ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முதல்வா் முத்துலட்சுமி என்ற சசிகலா வாழ்த்திப் பேசினாா். சுற்று வட்டார அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளிச் செயலா் சுந்தரம் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியை அமிதா நன்றி கூறினாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT