கடையம் அருகே இளம்பெண் எலி மருந்தை தின்று, உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கடையம் அருகே உள்ள மாதாபுரம்,பிரதானச் சாலையைச் சோ்ந்த டேனியல் தங்கத்துரை மகள் லெவியாள் (21). டேனியல் தங்கத்துரைமற்றும் அவரது மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இதனால் மனவேதனையிலிருந்த லெவியாள் சில நாள்களுக்கு முன் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதுகுறித்து பெற்றோருக்குத் தெரியாத நிலையில், சில நாள்களில் வயிறு வலிப்பதாகக் கூறியதையடுத்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].