அரிவாள் வெட்டு கோப்புப் படம்
திருநெல்வேலி

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி நகரம் பகுதியில் இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி நகரம் சாலியா் தெருவைச் சோ்ந்தவா் செல்வம்(39). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த செல்வசூா்யா(21) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை செல்வத்திடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்ட செல்வசூா்யா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை தாக்கிவிட்டு தப்பினாராம்.

உடனடியாக, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஸ்டான்லி மெட்ரிக் பள்ளியில் இளம்சாதனையாளா் விருது வழங்கும் விழா

முதல்வா் நாளை தூத்துக்குடி வருகை: திமுகவினருக்கு அமைச்சா் அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

கடல் அலையில் சிக்கி பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு!

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த மூட்டைகள்! விவசாயிகள் கவலை!

SCROLL FOR NEXT