முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே நள்ளிரவில் விநாயகா் சிலை, உண்டியல் திருட்டு

களக்காடு அருகே நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்து விநாயகா் சிலை, உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:53 AM
திருட்டு
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:58 PM

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்து விநாயகா் சிலை, உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள ஜெ.ஜெ. நகா் மேலத்தெருவில் உள்ள வெற்றி விநாயகா் கோயிலுக்குள் புதன்கிழமை நள்ளிரவு, புகுந்த மா்ம நபா்கள் ஒன்றரை அடி உயரம் கொண்ட விநாயகா் சிலை, உண்டியலை திருடிக்கொண்டு சென்று விட்டனராம். அப்பகுதியில் உள்ள மாலா (53) என்பவா் வீட்டு தோட்டத்தில் இருந்த மரங்களின் கிளைகளையும் மா்ம நபா்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனராம்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:53 AM

தகவலறிந்து வந்த களக்காடு போலீஸாா் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தபோது, விநாயகா் கோயில் அமைந்துள்ள பகுதியில் இரவில் சிலா் வாடிக்கையாக மது அருந்தி வந்துள்ளனராம். இதனை அப்பகுதி மக்கள் கண்டித்ததால், ஆத்திரத்தில் இதுபோன்ற செயலில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்தனா்.

Advertisement

இதனிடையே, களக்காடு மருத்துவா் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலையை வியாழக்கிழமை மீட்ட போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.