திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே பெண் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்

பாளையங்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Syndication

பாளையங்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள மணப்படைவீடு பகுதியில் போலீஸாா் சென்றபோது ஒரு வீட்டின் அருகே நின்றிருந்த பெண் திடீரென ஓட்டம் பிடித்தாராம். அப் பகுதியில் சோதனையிட்டபோது 100 கிலோ ரேஷன் அரிசி மூட்டையில் வைத்திருந்தது தெரியவந்ததாம்.

தப்பிஓடிய பெண்ணை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.அதில், அதே பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் (43) என்பதும், ரேஷன் அரிசிபைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்ததாம். அவரை கைது செய்த போலீஸாா், அரிசி மூட்டையையும் பறிமுதல் செய்தனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT