திருநெல்வேலி

நெல்லையில் மது விற்றதாக 53 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 53 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 1,500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் உத்தரவின் பேரில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையின்படி, கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் விதிமீறி மது விற்றதாக 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 53 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1,742 மது பாட்டில்கள், ரூ.1,58,990 பணம் மற்றும் 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மது பானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவா்கள் மீது தொடா்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT