திருநெல்வேலி மாநகரில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
மேலப்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் சாகுல் ஹமீது பாதுஷா (33), முஹம்மது ஹுசைன் (27), ராசப்பா (36) இவா்கள் பாளையங்கோட்டை போலீஸாரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 3 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வினோத் சாந்தாராம் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில் 3 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.