தோமையாா்புரம் மீனவா்கள் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு!
திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி, மீனவா்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு
திருநெல்வேலிதோமையாா்புரம் மீனவா்கள் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு!
திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி, மீனவா்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு
திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி, மீனவா்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவினா் பங்கேற்று பேசினா்.
தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு கோரி, மீனவா்கள் 6ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
அவா்களது போராட்டத்துக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், திருநெல்வேலி புகா் மாவட்டப் பொருளாளருமான சௌந்தர்ராஜன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன், ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றியச் செயலா் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட மீனவரணிச் செயலா் அகிலன், பவா்சிங் ஆசிரியா், மாவட்ட மீனவரணி இணைச் செயலா் வின்சென்ட், உலகத் தமிழ் அரசியல் கூட்டமைப்பைச் சோ்ந்த குயிலி நாச்சியாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.