முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம்

Updated On : 6 மார்ச், 2026 at 1:42 AM
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 10:26 PM

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் உள்ள முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் ஜி.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணை கண்காணிப்பாளா் அ.ஸ்ரீகுமாா் வரவேற்றாா். இக்கூட்டத்தில் திருநெல்வேலி அஞ்சலக கோட்டத்தின் அனைத்து உபகோட்ட அதிகாரிகள், தலைமை அஞ்சலக அதிகாரிகள், திருநெல்வேலி மாவட்ட சிறுசேமிப்பு அதிகாரி கருப்பசாமி, 32 அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்களின் கோரிக்கைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் உறுதியளித்தாா். மேலும் சிறுசேமிப்பு முகவா்கள் அதிக எண்ணிக்கையிலான கணக்குகளை தொடங்குமாறு கேட்டுக்கொண்டாா்.

Advertisement

படவரி ற்ஸ்ப்05ல்ா்ள்ற்ஹப் பாளையங்கோட்டையில் நடைபெற்ற அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம்.