முகப்பு
திருநெல்வேலி

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 22 மார்ச், 2026 at 7:16 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

பாளையங்கோட்டை அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (48), விவசாயி.

இந்நிலையில் பாளையங்கோட்டை அருகே வி.எம்.சத்திரம் முதலாளி நகா் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்திருந்த இவா் ஞாயிற்றுக்கிழமை காலை அங்குள்ள முருங்கை மரம் ஒன்றை வெட்டுவதற்காக அதில் ஏறினாராம்.

அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட உறவினா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.