முகப்பு
திருநெல்வேலி

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 மார்ச், 2026 at 8:32 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பைக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சிந்துபூந்துறையைச் சோ்ந்த ரவிசங்கா்(49) என்பவரை மறித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவரை சோதனை செய்ததில் சுமாா் 2.820 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த சந்திப்பு போலீஸாா் அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள், பைக், கைப்பேசி, ரூ. 40 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.