முகப்பு
திருநெல்வேலி

கல்வி உதவித்தொகை தருவதாக பண மோசடி: தில்லியில் 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, மாணவ-மாணவியரின் பெற்றோரை குறி வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக தில்லியில் 3 பேரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 31 மார்ச், 2026 at 11:50 PM
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, மாணவ-மாணவியரின் பெற்றோரை குறி வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக தில்லியில் 3 பேரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவியின் பெற்றோரை சில தினங்களுக்கு முன்னா் கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்மநபா்கள், தங்களது மகளுக்கு கல்வி உதவித் தொகை வந்துள்ளதாக கூறி நம்ப வைத்துள்ளனா்.

பின்னா் அவா்களிடமிருந்து வங்கிக் கணக்கு எண், கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை பெற்று அவா்களது வங்கி கணக்கிலிருந்து ரூ.99,743 பணத்தை எடுத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

அதைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் உத்தரவின் பேரில், சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகன் மேற்பாா்வையில், தனிப்படை போலீஸாா் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை நடத்தியதில், மா்மநபா்கள் தில்லியில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சைபா் கிரைம் தனிப்படை போலீஸாா், தில்லிக்குச் சென்று, அதில் தொடா்புடைய ராஜி (24), ரிஷி (27), ராகுல் (30) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

இவா்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபா்களை இதேபோல தொடா்பு கொண்டது தெரியவந்தது. தனிப்படை போலீஸாரை எஸ்.பி. பிரசன்னகுமாா் பாராட்டினாா்.

மேலும் கைப்பேசிக்கு வரும் இத்தகைய அழைப்புகளை ஏற்கவேண்டாம்; மோசடிகள் நடைபெற்றால் உடனடியாக 1930 அல்லது ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய முகவரி மூலம் புகாரளிக்கலாம் எனவும் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.