முகப்பு
திருநெல்வேலி

முன்னீா்பள்ளத்தில் விபத்து: காவல் உதவி ஆய்வாளா் காயம்

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளத்தில் நேரிட்ட விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 7:20 PM
விபத்து
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளத்தில் நேரிட்ட விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா்.

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தை சோ்ந்தவா் எட்வின் அருள்ராஜ் (55). முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் முன்னீா்பள்ளத்தில் இருந்து மேலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது எதிரே வந்த பயணிகள் ஆட்டோவும், இவரது மோட்டாா் சைக்கிளும் மோதிக்கொண்டனவாம். இதில், எட்வின் அருள்ராஜ் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து திருநெல்வேல மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.